இந்திய பாதீட்டில் இலங்கைக்கு அதிக நிதி ஒதுக்கீடு
இந்தியாவின் நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்களுக்காக இலங்கை, 245 கோடி இந்திய ரூபாய்களை பெற்றுள்ளது.
இது கடந்த ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட 150 கோடியை விட 95 கோடி ரூபாய் அதிக தொகையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024-25 பாதீட்டின் ஒரு பகுதியாக, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
இருதரப்பு உறவுகள்
இந்தக் கூடுதல் நிதியுதவி பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் பாதீட்டு ஒதுக்கீட்டின்படி, நேபாளம் 700 கோடி ரூபாய் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது.
இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட 550 கோடியிலிருந்து 150 கோடி ரூபாய் அதிகமாகும்.
அதே சமயம் சீசெல்ஸூம் 30கோடி ரூபாய் நிதியுதவியை பெற்றுள்ளது.
எனினும் பூட்டான், மியன்மார், மொரீஸியஸ், பங்களாதேஸ் மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளுக்கான நிதியுதவிகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைத்;தீவு ஆகிய இரண்டு நாடுகளும் முறையே 200 கோடி மற்றும் 400 கோடி ரூபாய்களை நிதியுதவியாக பெற்றுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
