இலங்கையில் மனிதர்களை விட குரங்குகளின் இனப்பெருக்கம் அதிகம் - முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு
இலங்கையில் விலங்குகள் மனிதர்களை விட வேகமாக இனத்தை பெருக்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சிறிசேன, இலங்கையில் விலங்குகள், குறிப்பாக குரங்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 12 லட்சம் குரங்குகள் இருந்தன. தற்போது அவை மேலும் பெருகியிருக்க வாய்ப்புக்கள் உள்ளன. மனிதர்களை பொறுத்தவரையில் அவர்கள் பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர்.
குரங்குகளின் இனப்பெருக்கம்
எனினும் குரங்குகள் வேறு விளையாட்டுகளை விளையாடுவதில்லை. எனவே அவை தமது இனத்தை வேகமாக மனிதரை காட்டிலும் பெருக்கி வருகின்றன.
எனவே நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவைப்பட்டால் விலங்குகளின் கவனத்தை வேறு விளையாட்டுகளுக்கு மாற்ற வேண்டும் என்று சிறிசேன கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் விலங்குகள் உரிமை அமைப்புகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் விவசாயத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள விலங்குகளின் பெருக்கத்தை
கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.