அபிவிருத்தி மீளாய்வு தொடர்பில் மாவட்ட செயலாளர் கண்காணிப்பு விஜயம்
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அபிவிருத்தி திட்டம் மீளாய்வு தொடர்பான கண்காணிப்பு விஜயம் ஒன்றை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி மேற்கொண்டுள்ளார்.
குறித்த அபிவிருத்தி மீளாய்வு மற்றும் கலந்துரையாடலானது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அபிவிருத்திகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மூலமான மதிப்பீடு மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
கண்காணிப்பு விஜயம்
இதன் போது வெளிக்கள கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் திருகோணமலை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |