கிளிநொச்சியில் நடமாடும் சேவை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவின் பாரதிபுரம், பொன்னகர் கிராமங்களுக்கான இலவச குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கான நடமாடும் சேவை ஆரம்பமாகவுள்ளது.
இந்த நடமாடும் சேவையானது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எதிர்வரும் (30.05.2023) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளது.
மேலும் பொன்னகர், பாரதிபுரம் கிராமங்களில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை மூலம் இலவச குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களை செலுத்தாதவர்கள் எதிர்வரும் (30.05.2023) முன்னதாக விண்ணப்ப படிவங்களை பெற்றுகொள்ளவேண்டும்.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
இதேவேளை, பூரணப்படுத்திய விண்ணப்ப படிவங்களுடன் இதுவரை 1,500 ரூபாய் வைப்பு பணத்தை செலுத்தாதவர்கள் கிளிநொச்சி -155 ஆம் கட்டை ஏ9 வீதியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் வீடுகளுக்கான இலவச குழாய் வழி குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இச் சந்தர்ப்பத்தை தவறாது பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |