இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் புதிய திட்டம்!(Photos)
இலங்கையில் நடமாடும் எரிபொருள் விநியோக முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கான எரிபொருளை வழங்குவதற்கு முன்னோடி திட்டமாக நடமாடும் எரிபொருள் விநியோக முறையை பயன்படுத்துவதற்கு சிபெட்கோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நடைமுறை
இந்த நடமாடும் எரிபொருள் பாரவூர்திகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அப்பால் பெரிய திறந்த பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் பொருட்கள் விநியோகிக்கப்படும் கேன்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் இந்த முறை விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
