இவரைக் கண்டால் உடன் அறிவிக்கவும்:பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
பல வருடங்களாக காணாமல் போயுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய அதபத்து முதியன்சேலாகே சுமேத புத்ததாச என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில், காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் மனைவி கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தொலைபேசி இலக்கங்கள்
இதனையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்தநிலையில், விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் காணாமல்போயுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 071 - 8594912 அல்லது 011 – 2392900 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
