காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்: அம்பாறை கடற்றொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Ampara Sri Lanka Fisherman
By Rusath Oct 08, 2022 02:46 PM GMT
Report

“காணாமல் போன கடற்றொழிலாளர்களின் பயணப்பாதையை நோக்கும் போது வடமாகாண கடலில் கடற்றொழிலாளர்கள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம்” என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் தெரிவித்துள்ளார்.  

கல்முனை கடலிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற கடற்றொழிலாளர்கள்  பல நாட்களாகியும் கரை திரும்பவில்லை.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்று கல்முனை கடற்றொழிலாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் இயந்திரப்படகு உரிமையாளர்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் கருத்து தெரிவிக்கையில். 

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் விபரம் 

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்: அம்பாறை கடற்றொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை | Missing Sri Lanka Fisherman Today Ampara News

”கல்முனை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பிலிருந்து கடந்த (26.09.2022)ஆம் திகதியன்று மாலை ஏ.எல்.எம். உவைஸ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்ற கடற்றொழிலாளர்களான கல்முனையைச் சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி கபீர் (வயது 50), எம்.என்.ஹில்மி (வயது 33) ஆகிய கடற்றொழிலாளர் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் காணாமல் போன தினத்திலிருந்து கடற்றொழிலாளர் சங்கங்கள், கடற்படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மீன்பிடி அமைச்சு என்பன இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 12 தினங்களாக கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை.

அத்துடன், கடந்த 28ம் திகதி மாலை 05 மணியளவில் வாழைச்சேனை பிரதேச கடலில் வைத்து மீன்பிடி படகொன்று கண்டுள்ளது.

அவர்களின் பயணப்பாதையை நோக்கும் போது வடமாகாண கடலில் அந்த கடற்றொழிலாளர்கள் தத்தளிக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களும், கடற்றொழிலாளர்களும் இவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என இயந்திரப்படகு உரிமையாளர்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தேடுதல் பணி தீவிரம் 

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்: அம்பாறை கடற்றொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை | Missing Sri Lanka Fisherman Today Ampara News

மேலும் “இவ்விடயத்தில் சிரத்தையெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு“ அதிகாரிகளை காணாமல் போனவர்களின் குடும்பத்தின் சார்பில் இங்கு கருத்து தெரிவித்த அவர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன், இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ்,

“கடற்படை, பொலிஸ், கடற்தொழில் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்திலையே தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம்.

ஊடகங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என உண்மைக்கு புறம்பான செய்திகளை எழுதியுள்ளார்கள்.

இங்கிருக்கும் எல்லோருக்கும் உண்மை நிலை தெரியும். இந்திய ராமேஸ்வரத்தில் உள்ளவர் அவர்களை தொடர்புகொண்டதாக அறிந்து அவரை நாங்கள் தொடர்புகொண்டு விடயங்களை கேட்டறிந்து கொண்டுள்ளோம்.

அவர்களின் தொலைபேசி செயற்பாட்டில் உள்ளது. ஆனால் அவர்களுடன் பேச முடியாதுள்ளது.

அவர்களை பாதுகாப்பாக மீட்க சகல வழிகளிலும் போராடிக்கொண்டிருக்கிறோம். இறைவனின் உதவியுடன் அவர்களை மீட்போம்“ என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இவ் ஊடக சந்திப்பானது வரையறுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள், கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க ஏற்பாட்டில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US