காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்: அம்பாறை கடற்றொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Ampara Sri Lanka Fisherman
By Rusath Oct 08, 2022 02:46 PM GMT
Report

“காணாமல் போன கடற்றொழிலாளர்களின் பயணப்பாதையை நோக்கும் போது வடமாகாண கடலில் கடற்றொழிலாளர்கள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம்” என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் தெரிவித்துள்ளார்.  

கல்முனை கடலிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற கடற்றொழிலாளர்கள்  பல நாட்களாகியும் கரை திரும்பவில்லை.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்று கல்முனை கடற்றொழிலாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் இயந்திரப்படகு உரிமையாளர்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் கருத்து தெரிவிக்கையில். 

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் விபரம் 

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்: அம்பாறை கடற்றொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை | Missing Sri Lanka Fisherman Today Ampara News

”கல்முனை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பிலிருந்து கடந்த (26.09.2022)ஆம் திகதியன்று மாலை ஏ.எல்.எம். உவைஸ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்ற கடற்றொழிலாளர்களான கல்முனையைச் சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி கபீர் (வயது 50), எம்.என்.ஹில்மி (வயது 33) ஆகிய கடற்றொழிலாளர் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் காணாமல் போன தினத்திலிருந்து கடற்றொழிலாளர் சங்கங்கள், கடற்படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மீன்பிடி அமைச்சு என்பன இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 12 தினங்களாக கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை.

அத்துடன், கடந்த 28ம் திகதி மாலை 05 மணியளவில் வாழைச்சேனை பிரதேச கடலில் வைத்து மீன்பிடி படகொன்று கண்டுள்ளது.

அவர்களின் பயணப்பாதையை நோக்கும் போது வடமாகாண கடலில் அந்த கடற்றொழிலாளர்கள் தத்தளிக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களும், கடற்றொழிலாளர்களும் இவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என இயந்திரப்படகு உரிமையாளர்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தேடுதல் பணி தீவிரம் 

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்: அம்பாறை கடற்றொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை | Missing Sri Lanka Fisherman Today Ampara News

மேலும் “இவ்விடயத்தில் சிரத்தையெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு“ அதிகாரிகளை காணாமல் போனவர்களின் குடும்பத்தின் சார்பில் இங்கு கருத்து தெரிவித்த அவர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன், இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ்,

“கடற்படை, பொலிஸ், கடற்தொழில் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்திலையே தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம்.

ஊடகங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என உண்மைக்கு புறம்பான செய்திகளை எழுதியுள்ளார்கள்.

இங்கிருக்கும் எல்லோருக்கும் உண்மை நிலை தெரியும். இந்திய ராமேஸ்வரத்தில் உள்ளவர் அவர்களை தொடர்புகொண்டதாக அறிந்து அவரை நாங்கள் தொடர்புகொண்டு விடயங்களை கேட்டறிந்து கொண்டுள்ளோம்.

அவர்களின் தொலைபேசி செயற்பாட்டில் உள்ளது. ஆனால் அவர்களுடன் பேச முடியாதுள்ளது.

அவர்களை பாதுகாப்பாக மீட்க சகல வழிகளிலும் போராடிக்கொண்டிருக்கிறோம். இறைவனின் உதவியுடன் அவர்களை மீட்போம்“ என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இவ் ஊடக சந்திப்பானது வரையறுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள், கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க ஏற்பாட்டில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US