பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை
நாட்டில் உள்ள பாடசாலை நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சு மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
வெளிப்புற செயற்பாடு
வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை திட்டமிடுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் பின்பற்றவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடந்த மாதம் 26 ஆம் திகதி கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை
அதிக வெப்பம் நிலவும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்கள் போதியளவு நீர் பருகுவதற்கான அல்லது சோர்வைப் போக்குவதற்கான வழிவகைகளை செய்வது பொருத்தமானது எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வெப்பம் நிலவும் நாட்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை அவ்வாறே பின்பற்றுமாறு கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam
