பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாய அமைச்சின் புதிய திட்டம்
நாட்டில் பால் உற்பத்தி பெருமளவு குறைவடைந்துள்ளதால் கறவை மாடுகளை வளர்ப்பதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து மாடுகளை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் கறவை மாடுகளை வளர்ப்பதற்கான தாய் விலங்குகளின் பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் சுமார் 800,000 எருமைகள் இருப்பதாக தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியை நிறுத்தியுள்ள இரு நாடுகள்
இந்தியாவும் பாகிஸ்தானும் நாட்டின் தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடிய கறவை மாடுகளைக் கொண்டுள்ளன. ஆனால் அந்த நாடுகள் தற்போது கறவை மாடுகளின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளன.
இந்தியாவின் கால்நடைகளின் மரபணுக்களை திருடி புதிய இன மாடுகளை உருவாக்குவதால் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கால்நடைகளின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டன.
இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை
எவ்வாறாயினும், கறவை மாடுகளை இறக்குமதி செய்வது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடையும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து கறவை மாடுகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக பாகிஸ்தான் தூதுவருடன் எதிர்காலத்தில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.