சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு: அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் (VIDEO)
சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
பொருட்களின் விலை உயர்வை நிறுத்த முடியாது என்ற போதும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், மக்கள் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்ய இடமளிக்கப்பட மாட்டாது எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
எனினும், பொருட்களின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் தீப்பிடித்து வெடிப்பது தொடர்பிலும் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வாயு கலவை பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வாறான சம்பவங்கள் அந்த நாடுகளில் பதிவாகவில்லை எனவும் அமைச்சர் ஒருவர் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, இந்த வாயுக்கலவை மாற்றத்தால் எந்த சிக்கலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam