சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு: அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் (VIDEO)
சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
பொருட்களின் விலை உயர்வை நிறுத்த முடியாது என்ற போதும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், மக்கள் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்ய இடமளிக்கப்பட மாட்டாது எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
எனினும், பொருட்களின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் தீப்பிடித்து வெடிப்பது தொடர்பிலும் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வாயு கலவை பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வாறான சம்பவங்கள் அந்த நாடுகளில் பதிவாகவில்லை எனவும் அமைச்சர் ஒருவர் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, இந்த வாயுக்கலவை மாற்றத்தால் எந்த சிக்கலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022