மேர்வின் சில்வாவுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை (Mervyn Silva) பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் (Colombo High Court) உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை, இன்றையதினம் (07.05.2024) கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த வழங்கியுள்ளார்.
அதன்படி, அவரை 500,000 ரூபா பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு செல்ல தடை
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியதாக மேர்வின் சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கிலேயே மேர்வின் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |