கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Police Vesak Full Moon Poya Colombo Accident
By Dhayani Jun 02, 2026 06:41 AM GMT
Report

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் அன்னதான வரிசையில் கோர விபத்தினை ஏற்படுத்திய சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நேற்று முன்தினம் இரவு (31) சிற்றூந்து ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் சிகிச்சைக்காக ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

சாரதி கைது

இந்த விபத்தினை ஏற்படுத்திய பிறகு வாடகைக் கார் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், விரைந்து செயல்பட்ட பொலிஸார் கொடகம சந்திப்பில் சாரதியை கைது செய்திருந்தனர்.

கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல் | Megoda Vesak Dhanasal Accident Death Investigation

இந்த விபத்து தொடர்பில் பிலியந்தலாவைச் சேர்ந்த 42 வயதான வாடகை கார் சாரதி கைது செய்யப்பட்டு ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகத்திற்குரிய வாடகை கார் சாரதி மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் முந்தைய நாள் நள்ளிரவு வரை அவிசாவெல்லை பகுதியில் மேலும் இருவருடன் மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்பின்னர், மூவரும் வாடகைக்காரில் ஏறி, அவிசாவெல்லை-கொழும்பு பிரதான வீதியில் கொழும்பை நோக்கி அதிவேகமாக சென்றுள்ளனர்.

மயக்கமடையும் அளவுக்கு மது அருந்தியதாக கூறப்படும் சந்தேகநபர் வழியில் மேலும் இருவரை மோதிவிட்டு, அதிவேகமாக வாகனத்தை செலுத்திச்சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கடும் போக்குவரத்து நெரிசல்

இதனையடுத்து ​​நள்ளிரவு 12.30 மணியளவில் மீகொட சந்திப்பில் ரொட்டி தன்சல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல் | Megoda Vesak Dhanasal Accident Death Investigation

போக்குவரத்து நெரிசலைக்கண்டு, கடும் கோபமடைந்து, வரிசையில் காத்திருந்த மக்கள் மீது வாகனத்தை அதிவேகமாக மோதிச்சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வாகனத்தை நிறுத்தாமல் சென்ற போது பொலிஸார் மற்றும் அங்கிருந்த இளைஞர்கள் குழு துரத்திச்சென்று கொடகம சந்திப்பில் பிடித்துள்ளனர்.இதன்போது அவர் போதையில் சுயநினைவின்றி சிரித்துக்கொண்டே இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதும், வாகனத்தின் உரிமமும் முன்பே வழங்கப்பட்டிருந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த காரணத்திற்காக வாகனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்

மேலும், விபத்தை தவிர்க்க தவறியமை, அஜாக்கிரதையாக வாகனம் செலுத்தல், அதிவேகமாக வாகனம் செலுத்தல் மற்றும் குடிபோதையில் இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகநபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தானசாலை விபத்தில் வரிசையில் நின்றிருந்த 15, 32, மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35, 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்திருந்தனர்.

கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல் | Megoda Vesak Dhanasal Accident Death Investigation

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பிலியந்தல, வெவல பள்ளிய வீதியைச் சேர்ந்த 56 வயதான பி. பி. இந்திராணி என்ற பெண், அவரது 35 வயதான மகள் நவிஷா நிலாக்ஷி, அவரது 38 வயதான மருமகன் லசிகா பிரியங்கர நனயக்கரா மற்றும் உயிரிழந்த பெண்ணின் சகோதரரின் 15 வயதான மகள் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

மேலும் பாதுக்கவை சேர்ந்த சகோதரர்களான கிருஷ்ண பிரியங்கர மற்றும் நிஷான் பிரியங்கர ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.       

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ CIDயில் முன்னிலை

சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ CIDயில் முன்னிலை

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US