சுமந்திரன், சாணக்கியன் மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்துள்ளனர்.
கனேடிய நாடாளுமன்றத்தில் இன்று இவ்விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் குறிப்பிடுகையில்,
இன்றைய தினம் நானும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ சுமந்திரனும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின் பேரில் ஓர் கலந்துரையாடலுக்காக கனேடிய நாடாளுமன்றம் சென்று இருந்தோம்.
அதன்போது அங்கு 15 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
இதன்போது எம் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும், வட கிழக்கில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் வள சுரண்டல்கள் அதனுடன் கூடிய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்தோம்.
மற்றும் எமது மக்களுக்குப் பயன் தரக்கூடிய எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் சில பல திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தோம் அத்துடன் கனேடிய அரசாங்கமானது எமது மக்களுக்கான தீர்வுத் திட்டங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கு உரிய அழுத்தத்தை இலங்கை அரசு மேல் பிரயோகிக்க வேண்டும் எனவும் எமது ஆணித்தரமான கோரிக்கைகளை முன்வைத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.