ஐ.நா சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்!
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று (24.03.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
காணிப் பிரச்சினைகள்
பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு பிரதான விடயங்களின் அடிப்படையில் ஆளுநர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
முக்கியமாகக் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாகப் பலரது காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.

மக்களிடமும் காணி ஆவணங்கள் இல்லை, அரச திணைக்களங்களிடமும் அதற்கான பதிவுகள் இல்லை. இதனால் தமது காணிகளுக்கான உரித்துகளை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மக்கள் தொடர்ச்சியாகப் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் ஆளுநர் செயலகத்துக்கும் அதிகளவில் வருகை தருகின்றனர்.
முழுமையான ஆதரவு
எனவே, அவர்களின் காணிப் பிணக்குகளைத் துரிதமாகத் தீர்த்து, உரிய காணி உரித்துகளை வழங்க வேண்டியது எமது மிக முக்கிய தேவையாகும்.இதற்காக அரசாங்கம் ஏற்கனவே 'ஹிமிகம' (உரிமை) திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது,' எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உணர்திறன்களையும் சவால்களையும் கௌரவ ஆளுநர் மிகவும் நுட்பமாகக் கையாளுவதைப் பாராட்டினார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் முதலீடுகளை வடக்கிற்கு ஈர்ப்பதற்குத் தொடர்ந்து குரல்கொடுப்பதாக உறுதியளித்தார்.
ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்ட காணி முரண்பாடுகள், காணி விடுவிப்புச் செயன்முறைகள் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam