மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி கோயிலின் பூர்வாங்க கிரியைகள் இன்று
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி கோயில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பூர்வாங்க கிரியைகள் ஆலயத்தில் இன்று(09.04.2025) நடைபெற்றுள்ளன.
பூர்வாங்க கிரியைகளிலும் பெரும் தொகையான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானின் நல் அருளை பொற்றுக்கொள்ளவதை காணக் கூடியதாகவுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க மாவை கந்தனின் கும்பாபிஷேக பெருவிழாவை மக்கள் 3 தசாப்தத்திற்கு மேல் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
கும்பாபிசேக கிரியைகள்
ஈழ தேசத்திலும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்கின்ற மாவை கந்தனின் அருள் வேண்டி செல்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.
இன்றையதினம் தருமபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 27ஆவது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி, மாவை கந்தனின் கும்பாபிசேக கிரியைகள் வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
