மாத்தளை நாட்டுக்கோட்டை நகரத்தார் கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா
மாத்தளை நாட்டுக்கோட்டை நகரத்தார் கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
திருவருட் செல்வங்கள் பொழிந்து விளங்கும் மாத்தளை நகரில் எழுந்தருளி இருக்கும் கதிர்வேலாயுத சுவாமிக்கு எதிர்வரும், 15.09.2024 அன்று கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறவுள்ளது.
வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும், பஞ்சதள வர்ண அலங்காரத்துடன் அமைந்த இராஜ கோபுரத்துக்கும், புதிதாக அமையப்பெற்ற ஆறுபடை வீடுகளைக் கொண்ட முருகப்பெருமானின் சன்னதிகளுக்கும், கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எண்ணைக்காப்பு
இதன்படி எதிர்வரும், 9 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் இந்த பெருவிழாவில்13 ஆம் திகதி காலை 8 மணி முதல் 14 ஆம் திகதி மாலை 4 மணிவரை எண்ணைக்காப்பு செலுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
மாத்தளை நகரில் எழுந்தருளும் முருகனின் அருளை பெற 15.09.2024 அன்று அடியார்களின் அரோஹரா கோஷம் விண்ணதிர வேதம் ஓத, மங்கள வாத்தியம் ஒலிக்க இராஜகோபுர ஸ்தூபி விமான அபிஷேகம் மற்றும் கும்ப வீதிப் பிரதட்சணம், மூல ஆலயப் பிரவேசம், ஆகியவற்றில் கலந்து முருகனின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினர் வேண்டி நிற்கின்றனர்.