தென் அதிவேக வீதியில் பாரிய நெரிசல் நிலை
தென் அதிவேக வீதியில் இன்று 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக பாரிய நெரிசல் நிலை ஏற்பட்டது.
இதன்போது குறைந்தது ஒருவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களனிகம மற்றும் தொடன்கொட இடைப்பாதைகளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேன், ஜீப் மற்றும் சில கார்கள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து காரணமாக தென் அதிவேக வீதியின் ஒரு பக்கம் மூடப்பட்டது.
இதனால் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக வீதியின் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இறுதியாக விபத்தில் தொடர்புடைய வாகனங்கள் அகற்றப்பட்டு வீதிப்போக்குவரத்து
இயல்புக்கு கொண்டு வரப்பட்டது.