5 மாடிக் கட்டடத்தில் பாரிய தீ: மயிரிழையில் உயிர் தப்பிய நபர்
குருநாகல் - சதுரஷ மாவத்தையில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டடத்தில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் (20.06.2023) ஏற்பட்ட இந்த தீ விபத்தில் நபர் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
குருநாகல் மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள், 6 தண்ணீர் பௌசர்கள் மற்றும் மத்திய அதிவேக வீதியின் தீயணைப்பு வாகனமொன்றும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.
பொலிஸார் விசாரணை
கடும் முயற்சியின் பின்னர் ஒரு மணித்தியாலத்திற்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ பரவும் சந்தர்ப்பத்தில் 3ஆம் மாடியில் ஒருவர் சிக்கியிருந்ததுடன் அங்கிருந்தவர்களின் முயற்சியில் அவர் கீழே குவிக்கப்பட்டிருந்த மெத்தைகள் மீது குதித்து உயிர் தப்பியுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக குருணாகல் தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam