அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடி ஏற்படும் நிலை! விரைவாக திருத்தப்பட வேண்டிய குறைப்பாடு
அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.ஏழ்மையில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே குறைப்பாடுகள் விரைவாக திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஏழ்மையில் உள்ளவர்கள் புறக்கணிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சமுர்த்தி நலன்புரி செயற்திட்டம் அரசியல் நோக்கத்துக்காகவே வழங்கப்படுகிறது என எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி நலன்புரி வழங்கல் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது எதிர்க்கட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆட்சியில் இருந்த போது சமுர்த்தி நலன்புரி செயற்திட்டத்துக்கு எதிராக செயற்படவில்லை.
குறுகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டே சமுர்த்தி நலன்புரி செயற்திட்டம் விமர்சிக்கப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.ஏழ்மையில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே குறைப்பாடுகள் விரைவாக திருத்திக் கொள்ளப்பட வேண்டும் இல்லாவிட்டால் அது அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
