முல்லைத்தீவில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மரதன் ஓட்டம்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் அரை மரதன் ஓட்டப்போட்டி இன்று ( 04.08.2024) முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்கள்தின் ஏற்பாட்டில் கனடாவில் உள்ள கந்தசாமி பத்மநாதனின் முழுமையான அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டசெயலகம் முன்பாக ஆரம்பித்த மரதன் ஓட்டப்போட்டி குமுழமுனை மகாவித்தியால முன்றலில் நிறைவடைந்துள்ளது.
21 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த மரன் ஓட்டப்போட்டியில் வடமாகாணத்தின் 13 வலயங்களை சேர்ந்த 150 ற்கு மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
நினைவுக்கேடயம்
மரதன் ஓட்டப்போட்டியில் முதல் இடத்தினை பெற்ற வீரர்களுக்க தங்கப்பதக்கமும் முதல் 10 இடங்களை பெற்ற வீரர்களுக்கு சான்றிதழும்,நினைவு கேடயமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் பிரிவில் முதல் இடத்தினை முல்லைத்தீவு முத்தையன் கட்டு இடதுகரை அ.த.க.பாடசாலையின் மாணவன் விதுசன் பெற்றுக்கொண்டுள்ளார்.
பெண்களுக்கான போட்டியில் முதல் இடத்தினை புங்குடுதீவு மத்தியகல்லூரி மாணவி அபர்ணா பெற்றுக்கொண்டுள்ளார்.