ஐரோப்பா செல்ல காத்திருந்த இளைஞன் மரணம்
ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல காத்திருந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கேகாலை, தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெதிகம பொலிஸார் தெரிவித்தனர்.
தெதிகம பிரதேசத்தை சேர்ந்த அஷான் பிரபோத என்ற 27 வயதுடைய திருமணமாகாத இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ருமேனியாவில் வேலை
அடுத்த மூன்று வாரங்களுக்குள் ருமேனியாவில் வேலைக்குச் செல்லத் தயாராக இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல், உயிரிழந்த இளைஞர் உட்பட ஒன்பது பேர் கொண்ட குழுவினர் ஒரு இளைஞனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர்.
சடலம் கண்டுபிடிப்பு
அங்கு நீராடச் சென்ற போது அஷான் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை காணாமல் போன பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri