குடும்ப தகராறை தீர்க்க மனைவியுடன் பொலிஸ் நிலையம் சென்ற கணவனின் அதிர்ச்சி செயல்
பதுளையில் குடும்ப தகராறு ஒன்றை தீர்க்க தனது மனைவியுடன் எல்ல பொலிஸ் நிலையத்திற்கு வந்த கணவர் பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷம் குடித்த கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
20 வயதுடைய தம்பதி இன்று மதியம் குடும்ப தகராறு ஒன்றை தீர்க்கும் நோக்கில் எல்ல பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வந்திருந்தனர்.
கணவனின் அதிர்ச்சி செயல்
அங்கு, மனைவி தனது கணவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்,.
அப்போது, அவர் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலிருந்து வெளியே வந்து தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது உடனடியாக பதிலளித்த பொலிஸ் அதிகாரிகள் அவரை தெமோதர பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் நிலை மோசமாக இருந்ததால், அவரை பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்