மட்டக்களப்பில் மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு..!
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து 34 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(03.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாலமுனைப் பகுதியில் காணி ஒன்றினுள் மரத்தின் மேல் ஏறி மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது, மரத்தில் இருந்து விழுந்து கீழே விழுந்துள்ளார்.
தவறி விழுந்து உயிரிழப்பு
இதனைத் தொடர்ந்து பலத்த காயங்களுக்குள்ளான அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து மற்றும் மரணம் குறித்து காத்தான்குடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, உயிரிழந்த நபர் தனது வாழ்வாதாரத் தேவைக்காக மரம் ஒன்றில் ஏறியிருந்த போதே, எதிர்பாராதவிதமாக இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan