கம்பஹாவில் இருந்து முல்லைத்தீவு வந்தவர் அதிரடிப் படையினரால் கைது (Photo)
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கஜமுத்தினை விற்பனைக்காக கொண்டுவந்த நபர் ஒருவரை சிறப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
22.01.2022 நேற்று காலை முல்லைத்தீவு நகர் பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தினை சேர்ந்த 47 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரை முல்லைத்தீவு
பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட நீதவான்
நீதிமன்ற பதில் நீதிபதி வாசல்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.