நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்த மைத்திரி (Video)
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அவர் நல்லூர் கந்தனை வழிபட்டுள்ளதுடன், சிதறு தேங்காயும் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த பின்னர் யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவர் அங்கு கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இன்று (29.06.2023) காலை அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவர் யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள மைத்திரிபால சிறிசேன, இன்று முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
