ஜனாதிபதிக்கு மைத்திரியின் அறிவுரை-செய்திகளின் தொகுப்பு
மக்கள் விரோத செயற்பாட்டை முன்னெடுத்தால் இறுதியில் பின்வாங்க வேண்டிய நிலையே ஏற்படும் என்பதற்கு அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளமை சிறந்த சான்றாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரத்து செய்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மைத்திரி இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“தவறான முடிவுகளை எடுத்தால் பின்னடைவே ஏற்படும். மக்களுக்கு தேவையான விடயங்களை செய்யாமல், மக்கள் விரோதச் செயலில் ஈடுபட்டால் இதுபோல்தான் நடக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போதுள்ள அமைச்சுகளே மக்களுக்கு பெரும் சுமையாகும். இந்நிலையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளமை நாட்டுக்கு பெரும் அனர்த்தமாகும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
அதேவேளை, தேசியப் பேரவையில் அங்கம் வகிக்காத கட்சிகளின் முடிவை பாராட்டி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam