ஜனாதிபதிக்கு மைத்திரியின் அறிவுரை-செய்திகளின் தொகுப்பு
மக்கள் விரோத செயற்பாட்டை முன்னெடுத்தால் இறுதியில் பின்வாங்க வேண்டிய நிலையே ஏற்படும் என்பதற்கு அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளமை சிறந்த சான்றாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரத்து செய்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மைத்திரி இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“தவறான முடிவுகளை எடுத்தால் பின்னடைவே ஏற்படும். மக்களுக்கு தேவையான விடயங்களை செய்யாமல், மக்கள் விரோதச் செயலில் ஈடுபட்டால் இதுபோல்தான் நடக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போதுள்ள அமைச்சுகளே மக்களுக்கு பெரும் சுமையாகும். இந்நிலையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளமை நாட்டுக்கு பெரும் அனர்த்தமாகும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
அதேவேளை, தேசியப் பேரவையில் அங்கம் வகிக்காத கட்சிகளின் முடிவை பாராட்டி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri