விடுதலைப் புலிகளின் தலைவரை பிக்குகளே உருவாக்கினர்! முன்னாள் ஜனாதிபதி சீற்றம்: செய்திகளின் தொகுப்பு
பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த நாட்டில் விடுதலை புலிகளின் தலைவரை உருவாக்கி இருக்க மாட்டார் என முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை பிக்குகளே உருவாக்கியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
1956 ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் சிங்கள மொழி அரசகரும மொழியாக்கப்பட்டது. இதற்கு வடக்கில் இருந்து எதிர்ப்புகள் வலுத்தன. சர்ச்சைகள் உருவாகின.அதன்பின்னர் தமிழ் மொழியும் அரச மொழியாக்கப்பட்டது.
பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது இன்று போலவே அன்றும் மகா சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.பண்டாரநாயக்காவின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது.
இறுதியில் குறித்த ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார். அந்த ஒப்பந்தம் நடைமுறையாகி இருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவரை உருவாகி இருக்கமாட்டார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |