மைத்திரியின் சொத்துக்குவிப்பு தொடர்பில் நீதிமன்றில் வெளியான தகவல்

Maithripala Sirisena Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Sivaa Mayuri Jul 21, 2024 04:17 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

தாம் ஜனாதிபதியாக இருந்த போது வழங்கப்பட்ட “ஸ்வர்ணபூமி” உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithiripala Sirisena) கையகப்படுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவர், உயர்நீதிமன்றில் சமர்ப்பித்த சொத்துப் பிரகடனத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன கையகப்படுத்திய பத்து சொத்துக்களில் ஐந்து வீடுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே நடத்தப்படவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்

முன்கூட்டியே நடத்தப்படவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்

விசாரணைக்கு உத்தரவு

முன்னதாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்று, 100 மில்லியன் ரூபாய் நட்டஈட்டை செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மைத்திரிபாலவுக்கு உத்தரவிட்டுள்ளது.

maithiri-swarnabhoomi-scheme-invest-property

எனினும் அந்த நட்டஈட்டு பணத்தை தீர்ப்பதற்கு மேலதிக காலத்தை, மைத்திரிபாலவின் சட்டத்தரணிகள் அவகாசமாகக் கோரிய போதே, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன இந்த விடயம் தொடர்பில் கேள்விகளை தொடுத்தார்.

தாக்குதல்களுக்கு உள்ளானவர்களுக்காக முன்னிலையான, சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஜனாதிபதி பதவியை வகித்துக்கொண்டு எப்படி இவ்வளவு சொத்துக்களை ஜனாதிபதி ஒருவர் குவிக்க முடியும் என வினவினார்.

இந்த தகவல் ஊழலை வெளிப்படுத்துவதாகக் கூறிய அவர், விசாரணைக்கு உத்தரவிடுமாறும் பாதிக்கப்பட்டோர் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோரின் சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகையை தமது கட்சிக்காரர்கள் முழுமையாக செலுத்தியுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

கூடுதல் கால அவகாசம் 

முன்னதாக, பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன், ரூபாய்களும் மெண்டிஸிற்கு 10 மில்லியன் ரூபாய்களையும்; நட்டஈடாக செலுத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

maithiri-swarnabhoomi-scheme-invest-property

எனினும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தமக்கு உத்தரவிடப்பட்ட 79 மில்லியன் ரூபாய்களில் இதுவரை 1.9 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே செலுத்தியுள்ளார் என்று நீதிமன்றில் குறிப்பிடப்பட்டது.

அத்துடன், அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன, தமக்கு உத்தரவிடபபட்ட 75 மில்லியன் ரூபாய்களில் இதுவரை 4.1 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே செலுத்தியுள்ளதாகவும் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது

இந்தநிலையில், நட்டஈடுகளை வழங்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதிகள் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதிக்குள் நட்டஈட்டுத் தொகையை முழுமையாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கஞ்சிபானை இம்ரானின் போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்கிய மூவர் கைது

கஞ்சிபானை இம்ரானின் போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்கிய மூவர் கைது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US