கொழும்பில் வர்த்தகர் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்
கொழும்பின் புறநகர் பகுதியான மோதர பகுதியில் 6 நாட்களுக்கு முன்பு மீன் வியாபாரி ஒருவரின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த பெண் ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள தங்கப் பொருட்களைத் திருடி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட தங்கப் பொருட்களில் 16 தங்க வளையல்கள், 5 சங்கிலிகள், 14 மோதிரங்கள், 5 பென்டன்கள் மற்றும் ஒரு ஜோடி காதணிகள் உட்பட அவை சுமார் 50 பவுண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் முதலாம் திகதி தொழிலதிபர் ஒரு செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தங்க நகைகள் கொள்ளை
அதற்கமைய பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த பெண்ணைப் பற்றிய எந்த தனிப்பட்ட தகவலையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் வேலைக்கு அமர்த்தியதாக தொழிலதிபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் 7வது நாளிலிருந்து அவரது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளின் தர்ஷனவின் நெறிப்படுத்தலின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam