செல்வாக்கு மிக்க பெண்கள் மாநாட்டில் மகிந்தவின் மனைவி
ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு மிக்க பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.
ஈரான் அரசின் அழைப்பின் பேரிலேயே ஷிரந்தி ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் புர்கினா பாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, இலங்கை, சிரியா, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள், அமைச்சர்கள், துணை ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த ஆட்சியில் இருந்து ராஜபகச்ர்கள் மக்களால் விரட்டப்பட்ட பின்னர், மகிந்த குடும்பத்தினர் பங்குற்ற முதல் சர்வதேச மாநாடு இதுவாகும்.