முன்னாள் அமைச்சரின் அழைப்பின் பேரில் கொழும்பில் இன்று ஒன்றுகூடிய ரணில்-ராஜபக்ச கூட்டணி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச உட்பட பலர் மொட்டு கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் அழைப்பின் பேரில் இன்று நிகழ்வொன்றில் சந்தித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மகளின் திருமண நிகழ்விற்கு மொட்டு கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு
இந்த திருமண நிகழ்வில் மொட்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டதுடன் மகிந்த ராஜபக்ச புதிய தம்பதியினரை வாழ்த்தியுள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில்,''முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அன்பு மகளின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.புதிய தம்பதியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்''என கூறியுள்ளார்.











கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri