போதைப்பொருள் வியாபாரியை காப்பாற்ற ஹெலிகொப்டரை எடுத்துச் சென்ற மகிந்த.. சர்ச்சையை கிளப்பும் மகிந்த ஜயசிங்க
போதைப்பொருள் வியாபாரியான நிமல் லன்சாவின் வீட்டில் போதைப்பொருள் சோதனை நடந்தபோது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சதான் ஹெலிகொப்டரில் சென்று அவரைக் காப்பாற்றினார் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவையும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தனது உரையின் போது, நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இல்லாததை சுட்டிக்காட்டி, கிரிஷ் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக சென்றிருந்ததாகவும், போதைப்பொருள் கடத்தலின் கோட்ஃபாதர்களின் தற்போதைய வாரிசு எனவும் நாமல் ராஜபக்சவை குறிப்பிட்டுள்ளார்.
கிரிஷ் வழக்கு
மேலும், போதைப்பொருள் கடத்தலுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்று சிலர் கூறுவதை மறுத்த அவர், கடந்த காலத்தில் இடம்பெற்றதாகத் தாம் கூறிய சில சம்பவங்களையும் மேற்கோள்காட்டி தனது கருத்திற்கு விளக்கமளித்துள்ளார்.

அதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் குறித்தும் கருத்து வெளியிட்ட மகிந்த ஜயசிங்க,
"அதனால்தான் இன்று எல்லோரும் கவலைப்படுகிறார்கள்.இது ஒன்றிரண்டு பேர் சம்பந்தப்பட்டதல்ல, இந்த போதைப்பொருள் அரசியல் இப்போது ஒன்றோடொன்று தொடர்புடையதாகிவிட்டது.
தொடர்பு இல்லாததால்தான் இப்படி ஆகிறதா? நான் அச்சமின்றி சொல்கிறேன், போதைப்பொருள் வியாபாரியான நிமல் லன்சாவின் வீட்டில் போதைப்பொருள் சோதனை நடந்தபோது, தற்போதைய தலைமுறை நாமல் ராஜபக்சவின் தந்தையான மகிந்த ராஜபக்சதான் ஹெலிகொப்டரில் சென்று அவரைக் காப்பாற்றினார்.
கோட்பாதர்கள்..
அவரை அணைத்து அரவணைத்த அந்த அரசியல் தொடர்பு அது. அவர் இன்று இங்கே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் போதைப்பொருள் கடத்தலின் கோட்பாதரின் தற்போதைய தொடர்பு இன்று இந்த சபையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அவர் சபாநாயகர்கள் பட்டியலில் இருக்கிறாரா என்று கூட நான் சரிபார்த்தேன், ஆனால் யார் இந்த நாமல் ராஜபக்ச. வழக்குகள் வரும்போது, மக்கள் கவலைப்பட்டு இங்கு வந்து ஏதாவது சொல்கிறார்கள்.
அரசாங்கத்தைப் பற்றி நிறைய ஆலோசனைகள் வழங்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அது மிகவும் நல்லது. அந்த ஆலோசனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி, ஆனால் கனவான்களே, நாம் இன்னும் இதே நிலையில் தான் இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.