மகிந்தவின் புதுவருட கொண்டாட்டத்தில் பங்குபற்றாத மகன் யோஷித்த ராஜபக்ச (PHOTOS)
கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூன்று மகன்மாரும் இணைந்தே எந்தவொரு பண்டிகையிலும் கலந்துக்கொள்வார்கள்.
இந்நிலையில் நேற்று(14.04.2023) மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் சித்திரை புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. அவற்றில் மகிந்தவின் இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக்ச எந்தவொரு படத்திலும் பிரசன்னமாகவில்லை.
மேலும் கோட்டாபயவின் ஆட்சி காலத்தில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் அலுவலக பிரதானியாக யோஷித்த ராஜபக்ச கடமையாற்றினார்.
இவ்வாறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர், கடந்த சில நாட்களாக யோஷித்த ராஜபக்ச எந்தவொரு இடத்திலும் பிரசன்னமாகவில்லை. எனவே அவர் எங்கே இருக்கிறார் என்பது தொடர்பில் தற்போது மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் சித்திரை புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
சோபகிருது என்ற பெயருடன், சித்திரைப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், இன்று பிற்பகல் 2 மணி 3 நிமிடத்திலும்,
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, பிற்கல் 2 மணி 59 நிமிடத்திலும் பிறந்துள்ளது.
இதன்போது மகிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் மகிந்தவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, இளைய புதல்வர், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் இணைந்து புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.








