இலங்கை இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு! முதற்கட்டமாக அனுப்பப்பட்ட 200 பேர் - செய்திகளின் தொகுப்பு
25,000 பயிற்றுவிக்கப்பட்ட தொழில் துறைகளைச் சார்ந்த இலங்கை இளைஞர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்பும் முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
முதல் கட்டத்தின் கீழ், ருமேனியாவில் பணி புரிய 200 பேருக்கு அவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மாதத்திற்கு 2,000 முதல் 2,500 பேரை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,