ஒரு பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய சிறிய முடிவு:காத்திருந்த இன்ப அதிர்ச்சி
அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் உள்ள வீவர்வில்லேவைச் சேர்ந்த ரெபேக்கா பவல் என்ற பெண் பெரும் தொகை பணத்தை வெற்றி பெற்றுள்ளார்.
தனது முதல் லொட்டரியிலேயே அவர் £123,500 தொகையை பரிசாக வென்று அசத்தியுள்ளார்.
ரெபேக்கா பவல் ஜனவரி 7ம் திகதி சனிக்கிழமை லொட்டரியில் திடீரென கலந்துக்கொள்ள முடிவு செய்து, வாழ்நாளில் தனது முதல் லொட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
முதல் லொட்டரி சீட்டு
லொட்டரி வெற்றியை எதிர்பார்க்காத ரெபேக்கா, டிரா முடிந்த பல மணி நேரம் கழித்த பிறகும் தனது சீட்டை சரிபார்க்கவில்லை, ஆனால் இறுதியாக அவரது முடிவுகளை பார்த்தப்போது மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒன்றை தான் பெற்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
வெற்றி பெற்ற ரெபேக்காவின் டிக்கெட்டுகள் நான்கு வெள்ளை பந்துகள் மற்றும் சிவப்பு நிற பவர்பால் ஆகியவற்றின் $50,000 பரிசு எண்களுடன் பொறுத்தப்பட்டது. ஆனால் 3x பவர் ப்ளே மல்டிபிளையர் வெற்றிக்கு பிறகு பரிசு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் வரிகளுக்குப் பிறகு, ரெபேக்கா £87,890 ($106,876) பணத்தை வென்றுள்ளார்.
உலகின் அதிர்ஷ்டசாலி பெண்
வெற்றிக்கு பிறகு நார்த் கரோலினா கல்வி லொட்டரியிடம் ரெபேக்கா பேசிய போது, நான் இதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று நினைத்தேன். கடையில் இருந்த பெண்ணும் என்னிடம், 'உனக்கு தொடக்க நிலை அதிர்ஷ்டம் உண்மையிலேயே உள்ளது' என்று கூறினார்.
மேலும் பரிசு தொகையை கொண்டு புதிய கார் மற்றும் புதிய வீட்டை வாங்க போவதாகவும் மீதி எஞ்சிய தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக ரேபேக்கா தெரிவித்துள்ளார்.
ரெபேக்கா தனது முதல் லொட்டரியிலேயே £123,500($150,000) வென்ற பிறகு, உலகின் அதிர்ஷ்டசாலி பெண் என்று அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
