எண்ணெய் கிணறுகளை அழிக்கப்போவதாக டிரம்பின் நேரடி எச்சரிக்கை: 2022இற்கு பின் முதல்முறையாக நடந்த மாற்றம்
மத்திய கிழக்கில் பதற்ற நிலை தொடர்ந்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் அமெரிக்காவின் மசகு எண்ணெய் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க டொலரை கடந்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமான விலையில் காணப்படுகிறது.
ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை
சர்வதேச சந்தைக்கான ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலையும் அதிகரித்து, ஒரு பீப்பாய் 112.78 டொலராகப் பதிவாகியுள்ளது.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகளை அழிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கையே இந்த திடீர் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam