கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து
கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில் குடைசாய்ந்தது.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி கந்தளாய் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த இந்த லொறி, பொட்டான்காட்டு சந்தியில் வழி தவறி சேருநுவர வீதியில் சென்றுள்ளது.
சமகிபுர என்ற இடத்தில் லொறியைத் திருப்ப முயற்சித்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது லொறியில் ஓட்டுநர் மட்டுமே இருந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அதிர்ஷ்டவசமாக, அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்தில் ஒரு மின்கம்பத்தில் மோதியதால் அருகிலுள்ள ஒரு கடையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சுமார் மூன்று மணி நேரம் சேருநுவர வீதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து கந்தளாய் சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri