லண்டன் - வோல்தம்ஸ்ரோவிலுள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய 23ஆவது ஆண்டு மகோற்சவம்
லண்டன் (London) - வோல்தம்ஸ்ரோவில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய 23ஆவது ஆண்டு மகோற்சவம் இவ்வருடமும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கடந்த 19ஆம் திகதி (19.08.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவப் பெருவிழா எதிர்வரும் 03ஆம் திகதி (03.09.2024) பூங்காவனத்துடன் நிறைவு பெறவுள்ளது.
இசைக்கச்சேரி
இந்நிலையில் ஸ்ரீ கற்பக விநாயகரின் தேர்த்திருவிழா எதிர்வரும் 01ஆம் திகதி (01.09.2024) அன்றும் தீர்த்தத்திருவிழா 02ஆம் திகதி (02.09.2024) அன்றும் நடைபெறவுள்ளது.
மகோற்சவப் பெருவிழாவில் கொடியேற்ற தினமான 19, 20, மற்றும் 21 ஆம் திகதிகளில் புலவர் இராமலிங்கத்தின் சமய சொற்பொழிவு இடம்பெற்ற நிலையில் தேர்த்திருவிழா நாளான எதிர்வரும் முதலாம் திகதியன்று (01.09.2024) இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் இம்மகோற்சவ திருவிழாவில் நாதஸ்வர வித்துவான்களான ஈழத்தைச் சேர்ந்த கே. பஞ்சமூர்த்தி குமரன், பாலமுருகன், நாகதீபன் ஆகியோரின் இசைக்கச்சேரியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam