கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறி ரெஹான் ஜயவிக்ரம பொலிஸில் முறைப்பாடு
கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜயவிக்ரம (Rehan Jayawickrama) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தொலைபேசி மூலம் இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் ஜயவிக்ரம, அந்த தொலைபேசி அழைப்பை பதிவு செய்துள்ளார்.
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் இந்த கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து ரெஹான் ஜயவிக்ரம, அக்குரெஸ்ஸ உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
வெலிகமை நகர சபையின் முன்னாள் தலைவரான ரெஹான் ஜயவிக்ரம, ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகமை தொகுதியின் அமைப்பாளருமாவார்.