நாடு முழுவதும் மோசமடையும் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு பற்றாக்குறை! வெளியான காரணம்
நாடு முழுவதும் நிலவும் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு பற்றாக்குறை மேலும் மோசமடைந்து வருவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பதிவு செய்யப்பட்ட எரிவாயு இருப்புக்கள் பெறப்பட்டு வருவதாகவும் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வெளியான காரணம்
இதற்கிடையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் எரிவாயு பற்றாக்குறை கடுமையாக இருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, லாஃப் எரிவாயுக்கு இன்னும் கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும் நுகர்வோர் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், மக்கள் அதிகளவில் எரிவாயுவை வாங்குவதனால் சில பகுதிகளில் கடுமையான எரிவாயு பற்றாக்குறை நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது பல உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர்கள் இருப்பதாகவும், நுகர்வோர் இரண்டையும் வாங்க நடவடிக்கை எடுப்பதால் பற்றாக்குறை மேலும் மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri