சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் மாவீரர்கள் கற்பித்த பாடம்..
தமிழர் பகுதிகள் மாவீரர் தினத்தை அனுஸ்டித்துவரும் நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான சுமந்திரனிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
கடந்தகாலத்தில் அவர் இது தொடர்பில் தெரிவித்ததையும் இதனையும் பார்க்கின்ற போது அவர் தற்போது ஆத்மார்த்தமாக உணர்வுபூர்வமான உரையைாற்றுவதாகவே உள்ளது.
சுமந்திரனின் மாற்றம்
2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரை சந்தித்தார்கள்.
அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் தேசிய பிரச்சினை தீர்வதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பங்களிப்பு அவசியம் என தெரிவித்திருந்தார்.
இதன்பின்னர்தான் அவரின் நிலைமை முற்றுமுழுதாக மாறுகின்றது. அதபோலதான் தற்போது சுமந்திரனையும் எண்ண தோன்றுகின்றது.
சுமந்திரன் தமிழ்தேசியத்தையும் தமிழர் போராட்டத்தையும் கடந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.