மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: பொலிஸார் தீவிர விசாரணை
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
பண்டாரியாவெளி, கண்ணாக்காடு பகுதியில் மிக இரகசியமான முறையில் இந்த கசிப்பு உற்பத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நான்கு பரல்களில் இருந்த 8 இலட்சம் மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன், கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் மற்றும் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன.
முற்றுகையின் போது சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கவும் தப்பிச்சென்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri