அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைகள்
இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 249 ரூபாவாகவும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 248 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு ( சீனாவிலிருந்து இறக்குமதி ) 230 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ வெள்ளை கௌப்பி 978 ரூபாவாகவும், ஒரு கிலோ இந்திய பெரிய வெங்காயம் 255 ரூபாவாகவும், ஒரு கிலோ பாசிப் பயறு 935 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோ சிவப்பு கௌப்பி 920 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பு 280 ரூபாவாகவும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 790 ரூபாவாகவும், ஒரு கிலோ நெத்திலி கருவாடு 940 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலை 442 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 202 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam