தமிழர் தாயக ஆக்கிரமிப்பை பிரித்தானிய ஆளும் கட்சியிடம் முறையிட்ட முக்கிய பிரமுகர்கள்(Photos)

Sri Lankan Tamils United Kingdom Sri Lankan political crisis
By Chandramathi Dec 11, 2022 11:16 AM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள அரசினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகளை தடுத்து நிறுத்துவதுடன் அபகரிக்கப்பட்ட காணிகளை மீளப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என பிரித்தானிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சிவகுரு ஆதீன முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிவண. நோயல் இமானுவேல் ஆண்டகை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழர் தாயக ஆக்கிரமிப்பை பிரித்தானிய ஆளும் கட்சியிடம் முறையிட்ட முக்கிய பிரமுகர்கள்(Photos) | Land Grabbing By The Sinhalese Government In Tamil

இராஜதந்திர மட்டத்தில் நடைபெற்ற சந்திப்பு

இராஜதந்திர மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரித்தானிய ஆளும் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிரதமரின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான சிறப்பு தூதுவருமாகிய பியோனா புரூஸ், பிரித்தானிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்து நாடாளுமன்ற குழுவினுடைய உபதலைவருமாகிய ஷயோவான் வெயிலி, பிரித்தானிய லிபரல் கட்சியின் தலைவர் ஸேர் எட் டேவி ஆகியோரை சந்தித்து ஈழத்தமிழர்களின் அரசியல் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது இன்று தமிழர் தாயகப்பகுதியில் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் மிக முக்கிய சவாலான நில அபகரிப்பு தொடர்பில் முழுமையான தெளிவுபடுத்தல்கள் பிரித்தானிய பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயக ஆக்கிரமிப்பை பிரித்தானிய ஆளும் கட்சியிடம் முறையிட்ட முக்கிய பிரமுகர்கள்(Photos) | Land Grabbing By The Sinhalese Government In Tamil

இதேவேளை நில அபகரிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச சமூகம் என்ற அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்து நில அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதற்கும் அபகரிக்கப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் கையளிப்பதற்கும் உதவ வேண்டும் என்ற வேண்டுகோள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வாக சர்வதேசத்தின் கண்காணிப்பில் நடத்தப்படுகின்ற ஒரு பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே எங்களது தலைவிதியை நாங்களே தீர்மானிக்க விரும்புகின்றோம் என்பதை ஈழத்தமிழர்களின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஆதரவு

இதனை செய்வதற்கு பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவையென்பது இதன்போது வலியுறுத்தப்பட்டதாக இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் தாயக ஆக்கிரமிப்பை பிரித்தானிய ஆளும் கட்சியிடம் முறையிட்ட முக்கிய பிரமுகர்கள்(Photos) | Land Grabbing By The Sinhalese Government In Tamil

பிரித்தானிய அரசியல் உயர்மட்டங்களுடனான இந்த சந்திப்புகள் ஈழத்தமிழர்களுக்கான இன்றைய நிலைமையினை சர்வதேசத்திற்கு எடுத்துச்சொல்வதற்கும் களநிலைமையினை மிக தெளிவாக பிரித்தானிய பிரதிநிதிகளுக்கு எடுத்துச் சொல்வதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளன.

இதேபோன்று பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின் உதவி பணிப்பாளரையும் சந்தித்து இதே விடயங்களை கலந்துரையாடியதாகவும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US