கிழக்கு ஆளுனரினால் முன்னெடுக்கப்பட்ட காணி உறுதி வழங்கும் நடவடிக்கை
திருகோணமலை மாவட்டம் பட்டனமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள காந்திநகர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 70 வருடமாக மக்கள் எதிர்நோக்கி வரும் காணிப் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக அவர்களுக்கான குடியிருப்புக் காணிகளுக்கான காணி ஆவணங்களை வழங்க எடுக்கும் முதல் கட்ட நடவடிக்கை கடிதங்களை கடந்த 24ம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை நகரசபையின் கட்டுப்பாட்டில் இருந்த இக் காணியை மத்திய அரசாங்க காணித் திணைக்களத்திற்கு கையகப்படுத்திய நிலையில் இக்காணிகளில் 70 வருடங்களுக்கு மேலாக முறையான காணி ஆவணங்கள் இல்லாமல் இக்காணியில் குடியிருந்து வரும் மக்களுக்கு முறையான காணி ஆவணம் வழங்குவதற்காக நடவடிக்கையாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
காணி ஆவணம்
220 பேர் இக் காணிகளுக்கான விண்ணப்பித்திருந்த போதும் முதற்கட்டமாக 157 பேருக்கு காணிக் கச்சேரி வைக்கப்பட்டு காணி ஆவணம் வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் என். மதிவாணன், முன்னாள் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.