நீதிமன்றம் விதித்த அபராதத்தை போலி நாணயத்தாளைக் கொண்டு செலுத்திய பெண்
நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை போலி நாணயத்தாளைக் கொண்டு செலுத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்துவதற்காக போலி நாணயத்தாள்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அம்பலந்தொட்டை பெரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஐயாயிரம் ரூபா
8000 ரூபா அபராதத் தொகையை செலுத்துவதற்காக இந்தப் பெண் போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் காசாளர், போலி நாணயத்தாளை அடையாளம் கண்டு, அது குறித்து நீதிமன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், குறித்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri