குவைத்தில் ஈரான் நடத்திய பயங்கர தாக்குதல்.. இலங்கையர்கள் மூவர் படுகாயம்
குவைத் சர்வதேச விமான நிலையத்தைத் குறிவைத்து ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்த 60க்கும் மேற்பட்டவர்களில் இலங்கையர்களும் அடங்குவர் என இலங்கை தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்த இலங்கையர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
60க்கும் மேற்பட்டோர் காயம்
இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குவைத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்தத் தாக்குதலால் விமான நிலையத்தின் சில பகுதிகளுக்கும் அருகிலுள்ள தூதரகங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, ஈரானிய இலக்குகளுக்கு எதிரான சமீபத்திய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இது நடத்தப்பட்டதாக விவரித்துள்ளது.
குவைத் இந்தத் தாக்குதலை ஒரு ஆக்கிரமிப்புச் செயல் எனக் கண்டித்ததோடு, பதிலடியாக இராஜதந்திர நடவடிக்கைகளையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan