குருந்தூர்மலை விவகாரம் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காட்டம்
குருந்தூர்மலையை தொல்பொருள் திணைக்களத்தினுடைய ஆதிக்கத்திற்குள் முடக்கி தமிழர்கள் பாவிக்க முடியாத ஒரு இடமாக கொண்டு செல்வதற்கான முயற்சியாக இந்த அடக்குமுறையை நாங்கள் பார்க்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற பாெங்கல் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தொிவிக்கையில்,
நீதிமன்றத்தின் பிரதியை பெற்று அதன்பிரகாரம் பொங்கல் நிகழ்வை மேற்கொள்ள தயாராக ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்கு வந்திருந்தும் இங்கு ஒருசாராருக்கு ஒரு பானையில் மட்டும் பொங்க அனுமதி வழங்கி வேறுபானைகள் வைப்பதனை தடுத்து குறிப்பாக எங்களுடைய பொங்கலையும் தடுத்து தான் பொங்கல் நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.
நீதிமன்ற உத்தரவு
தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் தெளிவுபடுத்திய பின்னரும் அதாவது பொங்கல் எனில் வழமையாக ஒரு நேர்த்தியின் பிரகாரம் நடைபெறுகின்ற உற்சவம்.
அந்தவகையில் ஒருவருடைய நேர்த்தியுடன் மற்றவருடைய நேர்த்தியை தீர்க்க முடியாது இவ்வாறு தடுப்பது தவறானது.
நீதிமன்றத்தில் ஒரு பானையில் மட்டும் பொங்கல் பொங்க வேண்டும் என்ற உத்தரவு எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மாறாக பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதனை யாரும் தடுக்க முடியாது எனவும் அவ் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்திடம் நாங்கள் கேட்டுக்கொண்டது ஏனையவர்களும் பொங்கல் வைப்பதற்கு ஏற்ற வகையிலே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வழங்கினால் அல்லது நாங்கள் பொங்குவதற்குரிய தடைகள் ஏதும் இருப்பின் எந்தவகையில் பொங்க வேண்டும், எதனை செய்ய முடியாது என்ற விடயத்தை குறிப்பிட்டால் ஏனையவர்களுக்கு செய்தது போல் அதன் பிரகாரம் நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம் என கூறியும் அதனை அவர்கள் மறுத்திருக்கின்றார்கள்.
எங்களுடைய ஆதங்கங்களை சட்ட நிபுணர்களூடாக அணுகி நீதிமன்றத்தின் ஊடாக ஏனையவர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்கின்ற முறையிலே எங்களுடைய நியாயங்களையும் எடுத்து கூறி மக்களுக்கு இடையூறு இல்லாது பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கும் தொல்பொருளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நடத்துவதற்குரிய வகையில் எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
