செல்வந்த வர்த்தகர்களின் கடன்கள் தள்ளுபடி! ரணில் மீது குமார வெல்கம பகிரங்க குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து உரையாற்றும் போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பத்து செல்வந்த வர்த்தகர்களின் கடன்கள் தள்ளுபடி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில், தனக்கு மிகவும் நெருக்கமான பத்து செல்வந்த வர்த்தகர்களின் கடன்களை அறவிட முடியா கடனாக அறிவித்து தள்ளுபடி செய்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது நான் ஆதரவு வழங்கினேன். எனவே ஏதேனும் பிழைகள் நடந்தால் அதனை சுட்டிக்காட்ட தயங்கப் போவதில்லை.
செல்வந்த வர்த்தகர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு நாம் அவருக்கு வாக்கு வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |