கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர்களுக்கான இணைபாடவிதான செயற்பாட்டிற்காக சதுரங்க பலகை வழங்கி வைப்பு
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர்களுக்கான இணைபாடவிதான செயற்பாட்டிற்காக ஜனகன் அறக்கட்டளை மூலம் சதுரங்க பலகை மற்றும் நேர கணிப்பான் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு நேற்று(18.09.2024) இடம்பெற்றுள்ளது.
இணைபாடவிதான செயற்பாடு
ஜனகன் அறக்கட்டளையுடாக கல்வி கற்று ஆத்மார்த்தமான உறவுகளின் நினைவாக கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர்களுக்கான இணைபாடவிதான செயற்பாட்டிற்காக சதுரங்க பலகை மற்றும் நேர கணிப்பான் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்விற்காக ஆசிரிய ஆலோசகரும் கிளிநொச்சி மாவட்ட சதுரங்க சங்க தலைவருமான சிவரூபன், பாடசாலையின் முதல்வர் அ.பங்கையற்செல்வன் , 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி மகா வித்தியாலத்தின் அதிபரும் தற்போது ஓய்வு நிலை கோட்டக்கல்வி அதிகாரியான யோகநாதன் கிளி/ இந்து கல்லூரியின் பிரதி அதிபர் திரு சிவலிங்கம், பாடசாலை பழைய மாணவர் சஜந்தன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அறக்கட்டளையின் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.